மேலும்

முற்றாக முடங்கியது வடக்கு மாகாணம்

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடுர சம்பவத்துக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் இன்று முழுமையாக முடங்கியது.

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கை அதிகரிப்பது குறித்து சமந்தா பவருடன் மங்கள பேச்சு

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தினார்.

ஐந்து அரசியல் கைதிகள் இன்று நீதிமன்றினால் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து தமிழ் அரசியல் கைதிகள் இன்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறிலங்காவில் தமிழர் பகுதிகளிலேயே அதிகளவு வறுமைநிலை – உலக வங்கி ஆய்வு கூறுகிறது

உலக வங்கியின் அண்மைய ஆய்வின் பிரகாரம், சிறிலங்காவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்கள் அதியுச்ச வறுமையின் பிடியில் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பசிலுடன் முரண்பாடுகள் உள்ளன – ஒப்புக்கொள்கிறார் நாமல்

பசில் ராஜபக்ச விடயத்தில் தாமும் விமர்சனங்களைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தளம் அமைக்க அமெரிக்கா திட்டம் – திஸ்ஸ விதாரண

திருகோணமலையில் தளம் அமைக்கும் திட்டம் அமெரிக்காவுக்கு இருப்பதாக எச்சரித்துள்ளார், முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது- ஜோன் கெரி

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் திருட்டுத்தனமாக உடன்பாடு செய்து கொள்ளமாட்டோம்- ரணில்

அடுத்தமாதம் முதல்வாரம் கொழும்பு வரவுள்ள இந்தியக் குழுவுடன் நடத்தப்படும் பேச்சுக்களை அடுத்தே, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கான வரைவு தயாரிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

வவுனியா மாணவி கொலைக்கு நீதி கோரி இன்று வடக்கில் பணிநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு

வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், அதற்கு நீதிகோரியும்,  இன்று வட மாகாணத்தில், இரண்டு மணிநேர பணிநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 06

ஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு  எதிரிகள் கையில் எடுக்கும் முதல் ஆயுதம், விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.