மேலும்

முதலமைச்சர்களின் மாநாட்டில் இருந்து நழுவினார் விக்கி

ஹிக்கடுவையில் நேற்று நடந்த மாகாண முதலமைச்சர்களின் 32 ஆவது மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைகிறது – கோத்தா குற்றச்சாட்டு

நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் தாம் நிறுத்திய இராணுவப் படைப்பிரிவுகளை, அங்கிருந்து விலக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் 18 அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புகின்றனர்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள மேலும் 18 தமிழ் அகதிகள் வரும் 28ஆம் திகதி சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அகதிகளை சுயவிருப்பில் மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் இவர்களைத் தாயகம் அழைத்து வரும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

கொழும்பில் அமெரிக்க கடற்படை வாத்திய அணியின் இசை நிகழ்ச்சிகள்

சிறிலங்காவில் பொது இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியின் வாத்திய அணி கொழும்புக்கு வந்துள்ளது.

சிறிலங்காவில் திரவ எரிவாயு மின்உற்பத்தி நிலையம் – உதவத் தயார் என்று கனடா அறிவிப்பு

சிறிலங்காவில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது.

சுதந்திரக் கட்சியில் முக்கிய பொறுப்புக் கேட்கவில்லை – என்கிறார் கோத்தா

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனக்கு பொறுப்பு வாய்ந்த பதவி அளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருப்பதாக வெளியான செய்திகளை சி்றிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.

மாகாணங்களுடன் அதிகாரங்களைப் பகிரத் தயார்- சிறிலங்கா அதிபர்

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார் சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. ஹிக்கடுவவில் இன்று நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வரலாற்று எதிரி இந்தியா – உதய கம்மன்பில

சிறிலங்காவின் வரலாற்று எதிரி நாடான இந்தியாவுடன், எட்கா உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், இந்தியாவின் ஒரு மாநிலமாகவே சிறிலங்கா மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.

லசந்த படுகொலை- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகீஸ்டாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சரத் பொன்சேகாவைப் புகழ்ந்த விக்னேஸ்வரன்

சரத் பொன்சேகா தனது சுயநலனுக்காகவே அனைத்துலக விசாரணைக்கு ஆதரவளித்துள்ளார். இவர் முன்னைய அரசாங்கத்தில் இராணுவ நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்குப் பழிதீர்க்கும் முகமாகவே  அனைத்துலக விசாரணைக்கான ஆதரவை வழங்கியுள்ளார்.