மேலும்

மன்னார் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் பேராசிரியர் சூரியநாராயணின் முயற்சி தோல்வி

பாக்கு நீரிணையில் இந்திய- சிறிலங்கா மீனவர்கள் கூட்டாக மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியப் பேராசிரியர் வி.சூரியநாராயண், முன்வைத்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை – குழம்பும் ஆய்வாளர்கள்

ட்ரம்ப்  ஆட்சியில் ஆசியா மற்றும் ஏனைய பிராந்தியங்களில் ஏற்படக் கூடிய உள்ளார்ந்த தாக்கங்கள் தொடர்பாக விளங்கிக் கொள்வதில் வெளியுறவு அரசியல் ஆய்வாளர்கள் இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலத் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும் அடுத்து வரும் வாரங்களில் கடும் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொது பலசேனாவுக்கு மட்டக்களப்பில் நுழைய தடை – நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த ஞானசார தேரர்

மட்டக்களப்புக்குள் நுழைவதற்கு பொது பலசேனாவுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவைக் கிழித்தெறிந்த, கலகொடஅத்தே ஞானசார தேரர், பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல், தம்மை மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் தடுப்பது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க மரைன் கொமாண்டோக்களைக் கவர்ந்த கரும்புலிப் படகு

கடந்தவாரம் திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்திருந்த அமெரிக்க கடற்படையின் மரைன் கொமாண்டோ படையினர், கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல் படகுகளின் செயற்பாட்டு முறையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காண்பித்தனர்.

சிறிலங்கா மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை கற்க முடியாத நிலை

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் சிறிலங்கா மாணவர்களை அனுமதிக்கும் விடயத்தில், தலையீடு செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு சிறிலங்கா, ஈரான் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலைகளை அமைக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு, சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தலா 10 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந்த காற்றாலை மின் திட்டங்கள் அமைக்கப்படவுள்ளன.

சீனாவுக்கு மகிந்த விடுத்த எச்சரிக்கை

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவின் முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்கும் போது, பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று, சீனாவுக்குச் சென்றிருந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் உபய மெடவெல ஓய்வுபெற்றார்

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெல நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ளார்.