மேலும்

வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 வரை நிறுத்தி வையுங்கள் – சிறிலங்கா அதிபர் கோரிக்கை

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முடிவை டிசெம்பர் 31 ஆம் நாள் வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களிடம், அதன் தலைவரும், சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

500 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் நிலையம் – ஜப்பான், இந்தியாவுக்கு அழைப்புக் கடிதம்

சிறிலங்காவில் 500 மெகாவாட் திறன்கொண்ட இயற்கை எரிவாயு மின் திட்டங்களை அமைப்பதற்கு, ஜப்பான் மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு  கடிதங்களை அனுப்பவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

திரியாய் கடற்பகுதியில் நீலத் திமிங்கலம் போர்ப் பயிற்சி – மரைன் படையினர் பங்கேற்பு

சிறிலங்கா கடற்படையின் மரைன் பற்றாலியன், நீலத் திமிங்கலம்-3 என்ற போர்ப் பயிற்சியை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கடற்கரைப் பகுதியில்  நடத்தியுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.திசநாயக்கவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒற்றையாட்சி, பௌத்தத்தை விட்டுக்கொடுக்க முடியாது – சிறிலங்கா பிரதமர்

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை ஆகிய விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமிருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிஸ் குமாரை விடுவித்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரை விடுவித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரிக்கு குற்றச்சாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை பங்களாதேஷ் புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை பங்களாதேசுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடு – அமைச்சரவைக்கு அறிவிப்பு

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்துடன், 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாட்டை புதுப்பிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

11 தமிழர்கள் கடத்தப்பட்ட சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைது

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெலிசறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனப் பொறியாளர்களால் புதுப்பிக்கப்பட்ட எவ்-7 போர் விமானங்கள் விமானப்படையிடம் கையளிப்பு

கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள விமானங்களைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் அலகு, முதல்கட்டமாக சீனத் தயாரிப்பான இரண்டு எவ்-7 போர் விமானங்களை சிறிலங்கா விமானப்படைக்குப் புதுப்பித்துக் கொடுத்துள்ளது.