மேலும்

‘றோ’ மீதான குற்றச்சாட்டின் எதிரொலி – அவசரமாக சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். 

‘றோ’ என்று கூறவேயில்லை – சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்

அமைச்சரவைக் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் எந்த இடத்திலும், ‘றோ’ என்ற பதத்தைப் பாவிக்கவேயில்லை, என்றும், இந்தியப் புலனாய்வு  சேவை என்றே குறிப்பிட்டார் எனவும், சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகர் சிறிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.

நாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி

சீன அதிபர் சி ஜின்பிங்கின் இலக்கான , 70 இற்கும் மேற்பட்ட நாடுகளில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், தொடருந்துப் பாதைகள் போன்ற நவீன வர்த்தகக் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கான ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது, அதன் சில அயல்நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

‘றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன

தம்மைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு இருந்தது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் – பிரதமர் கடும் வாக்குவாதம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்

தன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சாட்டு, இந்திய – சிறிலங்கா உறவுகளை தீவிரமாக பாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி ஹிந்து’ தெரிவித்துள்ளது.

என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

சமரசம் செய்து கொள்ளாத சமத்துவப் போராளி சிதம்பர திருச்செந்திநாதன்

பன்முகத்தன்மையுள்ள, சகிப்புத்தன்மைமிக்க, நவயுக ஈழம் உருவாக வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். தன்னுடைய வழிகாட்டிகள் சொன்ன வார்த்தைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் ஒருவர் அர்ப்பணித்துக் கொண்டு வாழமுடியுமா? வாழமுடியும் என்று நிரூபித்த வாழ்க்கை சிதம்பரசெந்திநாதனுடையது.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாளை தீர்வு வழங்குவார் மைத்திரி- சம்பந்தன் நம்பிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக நாளை நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த வார பிற்பகுதியில் மோடி – ரணில் முக்கிய பேச்சு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வார பிற்பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக ‘ ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.