மேலும்

இனப்படுகொலை சொல்லாட்சியை மென்மைப்படுத்துமாறு விக்னேஸ்வரனுக்கு அமெரிக்கா போதனை?

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயார் – என்கிறார் ரணில்

தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல மாவட்டத்தில் சரத் பொன்சேகா போட்டி? – மகிந்தவுடன் மல்லுக்கட்டப் போகிறார்

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில், சரத் பொன்சேகாவை அங்கு களமிறக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐதேகவின் வேட்புமனுவில் ஹிருணிகா கையெழுத்து – உடைகிறது சுதந்திரக் கட்சி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்க ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் மற்றும் ஜாதிக ஹெல உறுமயவை இணைத்து நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை அமைத்து யானைச் சின்னத்தில் ஐதேக போட்டியிடவுள்ளது.

ராஜபக்சவின் மீள்வருகை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்குச் சோதனை – அலன் கீனன்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதானது சிறிலங்காவில் கடந்த ஒரு சில மாதங்கள் நடைமுறையிலிருந்த ஜனநாயக ஆட்சி மீண்டும் நசுக்கப்பட்டு நயவஞ்சக அரசியல் மீண்டும் தலைதூக்கப் போகிறது என்பதற்கான சமிக்கையாகவே நோக்கப்பட முடியும்.

சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களுக்கே சொந்தம் – சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த  பொதுமக்களின் 818 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கேகே வழங்குமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளதுடன், சிறிலங்கா முதலீட்டு சபையிடம் இந்த காணிகளை கையேற்றிருந்த கேட்வே இன்டர்ஸ்றீஸ் நிறுவனத்தின் வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.

வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசியப்பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமில்லை – மைத்திரி அதிரடி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா  அதிபரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னி, மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – ஏனைய இடங்களில் ஐதேகவுடன் கூட்டு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி, மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.