பாதுகாப்பு வலயங்களை அகற்றியிருந்தால் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம் – சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகள் கோரியது போன்று பேச்சுவார்த்தைக் காலத்தில் யாழ்ப்பாண உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றியிருந்தால், மாவிலாறில் போர் வெடித்து இரண்டே வாரங்களில் யாழ்ப்பாணத்தை இழந்திருப்போம் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் சிறிலங்காவின் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.