மேலும்

பிரிவு: செய்திகள்

ஐரோப்பிய நாடுகளின் தேவைக்கேற்ப மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறும் சிறிலங்கா

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் சிறிலங்காவுக்கு 108ஆவது இடம்

பூகோள சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் (Environmental performance index) சிறிலங்கா 108ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டி,180 நாடுகளை உள்ளடக்கியதாக அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.

எதிர்கால முதலீடுகள் குறித்து சீனாவுடன் சிறிலங்கா பேச்சு

chinசிறிலங்காவில் எதிர்கால முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

விசாரணைக்குழுவில் மூவரா – நால்வரா? – குழப்பும் தகவல்கள்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று நடவடிக்கையில் அரசாங்கம் தலையிடாது

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும், அதில் அரசாங்கம் தலையிடாது என்று சிறிலங்கா அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

கெரவலப்பிட்டியவில் திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்காவின் மேல் மாகாணத்தில் கெரவலபிட்டிய பகுதியில், 500 மெகாவாட் திறன்கொண்ட, திரவ இயற்கை எரிவாயு மின் நிலையம் ஒன்றை இந்தியா அமைக்கக் கூடும் என்று சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான மூலோபாயக் கலந்துரையாடல் நிறைவு

இந்திய- சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கு இடையிலான இரண்டாவது மூலோபாயக் கலந்துரையாடல் முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

சீபா, எட்கா உடன்பாடுகளால் ஆசியாவுக்கு நன்மை – சிறிலங்கா பிரதமர்

சிங்கப்பூர்-இந்தியா இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடும்(சீபா) , இந்தியா- சிறிலங்கா இடையில் கையெழுத்திடப்படவுள்ள பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடும் (எட்கா), தெற்காசியப் பிராந்தியத்துக்கு நன்மையளிக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிங்களவர்களின் நிம்மதி யார் கையில்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

சிறிலங்காவில் சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இங்கு வாழும் ஏனைய இன மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய விசாரணைக்குழு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.