மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது – சிவ்சங்கர் மேனன்

அண்டை நாடுகளைக் கைளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்கா இராணுவத் இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நியமனம்

சிறிலங்கா இராணுவத்தின் இராணுவத் தலைமை அதிகாரியாக (Chief of Staff)  மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் நேற்றுமாலை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவருக்கு சிறிலங்கா அதிபர், பிரதமர் வாழ்த்து

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

அரசை விட்டு வெளியேறவுள்ள அமைச்சர்கள் அடுத்த வாரம் சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு

தற்போதைய கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், அடுத்தவாரம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கவுள்ளனர்.

சீனாவின் கொழும்பு துறைமுக நகரத்தை வடிவமைக்கிறது அமெரிக்க நிறுவனம்

சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான துறைமுக நகரத்தை, அமெரிக்காவின் பிரதான கட்டட வடிவமைப்பு நிறுவனமான, ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் அன் மெரில் நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலருடன் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பென்ட்மனை, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

காணாமல்போனோர் பணியகம்- ஐ.நா பொதுச்செயலர் பாராட்டு

காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் ‘மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள்’ பட்டியலில் சிறிலங்கா

சிறிலங்காவை மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இணைத்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில், 30 நாடுகளை, மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஐ.நா நிபுணர் – புலிச்சந்தேக நபர்கள் சந்திப்பு விதிமுறைகளுக்கு அமையவே நடந்தது – ரவி கருணாநாயக்க

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்ட விடயத்தில், முன்னைய அரசாங்கத்தின் நடைமுறைகளே பின்பற்றப்பட்டன என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.