மேலும்

பிரிவு: செய்திகள்

இரண்டு வாரங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோகும் – எச்சரிக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

லலித் ஜெயசிங்கவை சேவையில் இருந்து இடைநிறுத்த தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க சிறிலங்கா காவல்துறையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல்

பாரிய உலங்குவானூர்தி தாங்கி நாசகாரி கப்பல் உள்ளிட்ட ஜப்பானிய கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்து – அமெரிக்கா, கனடா, ஐ.நா வரவேற்பு

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டிருப்பதற்கு அமெரிக்கா, கனடா மற்றும் ஐ.நா என்பன வரவேற்புத் தெரிவித்துள்ளன.

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டார் சிறிலங்கா அதிபர்

காணாமல்போனோர் பணியக சட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக அவர். கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில், காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இன்று கையெழுத்திட்டேன். இது நிலையான அமைதிக்கான பாதையில் சிறிலங்காவின் முன்னேற்றத்துக்கான மற்றொரு படியைக் குறிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் – வெற்றி பெற்றார் ராம்நாத் கோவிந்த்

இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராக பாஜக வேட்பாளர் ராம் நாத் கோவிந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 17ஆம் நாள் நடந்த தேர்தலில் இவர் 66.65 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

சம்பந்தனைச் சந்தித்தார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தமிழ் அகதிகளுக்கு குடியேறும் வாய்ப்பை மறுக்கும் அமெரிக்காவின் தேசப்பற்று சட்டம்

நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், அமெரிக்காவின் தீவிரவாத சட்டத்தினால் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இரண்டு நிதிக் கொடைத் திட்டங்களுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்காவின் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நிதியுதவி வழங்கவுள்ளது.

அரசியலமைப்பு உருவாக்க விவகாரம் – இரண்டாக உடைந்தது கூட்டு எதிரணி

அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, கூட்டு எதிரணியின் முக்கிய பங்காளிக் கட்சியான விமல் வீரவன்ச தலைமையிலான, தேசிய சுதந்திர முன்னணி அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகியுள்ளது.