சிறிலங்காவில் தமிழர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்கின்றன – பிரித்தானிய அமைப்பு குற்றச்சாட்டு
சிறிலங்காவில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னரும் சிறுபான்மை தமிழர்கள் மீதான சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தின் சித்திரவதைகள் முக்கியமான பிரச்சினையாக இன்னமும் தொடர்வதாக பிரித்தானியாவைத் தளமாக கொண்ட அனைத்துலக மனித உரிமை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.