மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் மீறல்களை அம்பலப்படுத்தும் ஜஸ்மின் சூகாவின் அறிக்கை

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் அறிக்கை ஒன்றை ஜஸ்மின் சூகா தலைமையிலான அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ளது.

நாளை மறுநாள் காலை பதவியேற்கிறது சிறிலங்காவின் புதிய அமைச்சரவை

சிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை மறுநாள் காலை 10 மணியளவில் பதவியேற்கவுள்ளது. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஐந்து மாத உறக்கத்துக்குப் பின்னர் கூடவுள்ளது வழிநடத்தல் குழு

ஐந்து மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடந்த அரசியலமைப்பு பேரவையின் அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிநடத்தல் குழு அடுத்த மாதம் மீண்டும் கூடவுள்ளது. வழிநடத்தல் குழு உறுப்பினர் ஒருவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய அமைச்சரவையில் ரவி, விஜேதாச – சரத் பொன்சேகாவுக்கு சட்டம் , ஒழுங்கு

புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில், ரவி கருணாநாயக்கவும், விஜேதாச ராஜபக்சவும் சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐதேக முக்கிய பதவிகளில் மாற்றம் – கட்சிக்குள் குழப்பம் நீடிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கட்சிக்குள் குழப்பங்கள் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா ரூபா மதிப்பு வீழ்ச்சியை நியாயப்படுத்திய மத்திய வங்கி ஆளுனர்

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி,  ஏனைய பல நாடுகளிலும் இதே நிலையே இருப்பதாக, அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்

காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தொடர்ந்து சரியும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு – வெளிநாட்டு கடன்சுமை அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஒரே வாரத்தில் சிறிலங்காவின் கடன்சுமை 47 பில்லியன் ரூபாவாவினால் அதிகரித்துள்ளது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தல்

புதிதாக நியமிக்கப்படும் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை 43 ஆக குறைக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் கூறியுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.