நாமலுடன் இன்று புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த – மோடி, டோவல், சோனியாவை சந்திக்க வாய்ப்பு
மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியா செல்கிறார்.



