மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நாமலுடன் இன்று புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த – மோடி, டோவல், சோனியாவை சந்திக்க வாய்ப்பு

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியா செல்கிறார்.

என் அனுபவத்தில் பாடம் கற்றுள்ளார் மைத்திரி – என்கிறார் மகிந்த

தனது அனுபவத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று கைது செய்யப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் தமிழ் மொழியை விழுங்கிய சீன மொழி – நியாயப்படுத்தும் நியூசிலாந்து நிறுவனம்

நியூசிலாந்தின் பிரபல பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றினால், சிறிலங்காவில் சந்தைப்படுத்தப்படும், வெண்ணெய் பொதியில், தமிழ் மொழி நீக்கப்பட்டு, சீன மொழியில் அச்சிடப்பட்டுள்ளது கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கை சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது – சம்பந்தன்

அரசியல் தீர்வு மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறினால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று எச்சரித்துள்ளார்  எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.

இந்தியாவின் கையில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் – ஏமாந்தது சீனா

இழுபறியில் இருந்து வந்த-  வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் – செனட் அங்கீகாரம்

சிறிலங்கா மற்றும் மாலைதீவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட அலய்னா பி ரெப்லிட்ஸ்சின் நியமனத்தை அமெரிக்க செனட் அங்கீகரித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான விக்னேஸ்வரனின் மனு நிராகரிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக டெனீஸ்வரன் தரப்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரும் மனுவை, சிறிலங்கா உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

படை அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் – காணாமல் போனோர் பணியகம் பரிந்துரை

ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட, படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று  காணாமல் போனோருக்கான பணியகம் சிறிலங்கா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கொழும்பு மையத்தை முடக்கி பலம் காட்டிய மகிந்த

கொழும்பு நோக்கி மக்கள் சக்தி என்ற பெயரில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் நேற்று பாரிய பேரணியை நடத்தினர்.