மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அரசிதழுக்கு எதிரான மனுக்களை விலக்கிக் கொள்ள இணக்கம் – உள்ளூராட்சித் தேர்தலுக்கு பச்சைக்கொடி

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான அரசிதழுக்கு (வர்த்தமானி) எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்களை விலக்கிக் கொள்ள முறைப்பாட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

ஐதேகவினர் வெளிநாடு செல்லத் தடை – கூட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி?

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைவரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கைது பயத்தில் கோத்தா – தடுக்குமாறு நீதிமன்றில் அடைக்கலம்

தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

யாழ்.குடாநாட்டு வெள்ளத்துக்கு தவறான வடிகாலமைப்பு முறையே காரணம் – பிரதீப் கொடிப்பிலி

அண்மைய மழையின் போது, யாழ். குடாநாட்டில் பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டமைக்கு, கடல்நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்தமை காரணம் அல்ல என்று சிறிலங்கா அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை, அனைத்துலக பிரகடனங்களில் கையெழுத்திட சிறிலங்காவுக்கு அழுத்தம்

தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது.

ஜின்தோட்டையில் முஸ்லிம்களின், வீடுகள், கடைகள் எரிப்பு- இனமுறுகலை அடுத்து ஊடரங்கு அமுல்

காலி மாவட்டத்தில் உள்ள ஜின்தோட்டை பகுதியில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து  அங்கு நேற்றிரவு முதல் காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் – ஏபி வெளியிட்டுள்ள படங்கள்

சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ்.

வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில்  கூடி ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம்

சிறிலங்காவில் புதிய முறைப்படி  உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்., கொழும்பு மாநகரசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

யாழ்ப்பாணம், கொழும்பு மாநகரசபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.