மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

வடக்கில் தமிழர்கள் மீதான இராணுவ மீறல்களை உறுதிப்படுத்துகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கில் சில தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீதான சித்திரவதை குற்றச்சாட்டு- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா

சிறிலங்காவில் தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனைச் சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, பதில் உதவிச் செயலர் ரொம் வஜ்டா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு அழுத்தம் – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில், தரம்குறைந்த எரிபொருளை கப்பலில் இருந்து இறக்குமாறு தனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக, சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம்சாட்டியுள்ளார்.

ரணில், மாரப்பனவுடன் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் பேச்சு

சிறிலங்காவுக்கு இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் தோமஸ் சானொன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்படவுள்ளார் சிவசக்தி ஆனந்தன்?

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமான உறுப்பினராகச் செயற்படவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் 24 மணிநேரத்துக்கு மிக கனமழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சிறிலங்காவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று 150 மி.மீ இற்கும் அதிகமான மிககனமழை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை எச்சரித்துள்ளது.

முதலீட்டுத் திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – சீன வெளிவிவகார அமைச்சர்

முக்கியமான முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக, சீனாவும் சிறிலங்காவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழலில் நாளை கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு நாளை மாலை 6 மணியளவில், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயலகத்தில் கூடவுள்ளது.

அடிப்படை உரிமை மீறல் மனுவும் பிள்ளையானின் காலை வாரியது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருலுமான பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின், அடிப்படை உரிமை மீறல் வழக்கை, 2018 மார்ச் 20ஆம் நாளுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.