மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நிகழ்வு – மாணவிகளின் மடிக்கணினி நடனத்துக்குத் தடை

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் இன்று, ‘ஒரே நாடு’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. காலிமுகத்திடலில் இன்று காலை சுதந்திர நாள் நிகழ்வுகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளன.

வடக்கு, கிழக்கில் 51 உள்ளூராட்சி சபைகளைக் கூட்டமைப்பு கைப்பற்றும் – ஐதேக ஆய்வில் தகவல்

எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி  276 சபைகளைக் கைப்பற்றும் என்றும் ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அஜித் பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மோதல்களை நிறுத்துமாறு மைத்திரி, ரணிலிடம் சபாநாயகர் கோரிக்கை

சிறிலங்காஅதிபரும் பிரதமரும் தமக்கிடையிலான அரசியல் மோதலை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய கேட்டுக் கொண்டுள்ளார்.

காணாமல் போனோர் பணியக சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமாம்

காணாமல் போனோர் பணியக சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் கூட்டமைப்பின் பரப்புரை தீவிரம் – பாதுகாப்பு கெடுபிடிகளால் முகம்சுழிக்கும் ஆதரவாளர்கள்

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றன. வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.

மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் மகிந்த

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சியமைக்க வருமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள் ஐ.நா அதிகாரி

25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

காங்கேசன்துறை சொகுசு மாளிகை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு?

வடக்கு மாகாணசபை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளைப் புறக்கணித்து, காங்கேசன்துறையில் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையளிக்கும் முனைப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் கோத்தா – தினேஸ் குணவர்த்தன

2020ஆம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தகுதியானவர் அல்ல என்று கூட்டு எதிரணியின்  தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவ வேண்டும் – இந்தோனேசிய அதிபரிடம் சம்பந்தன் கோரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு இந்தோனேசியா உதவ வேண்டும் என்று, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.