மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள் ஐ.நா அதிகாரி

25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

காங்கேசன்துறை சொகுசு மாளிகை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு?

வடக்கு மாகாணசபை, யாழ். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கோரிக்கைகளைப் புறக்கணித்து, காங்கேசன்துறையில் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட சொகுசு மாளிகையை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் கையளிக்கும் முனைப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் கோத்தா – தினேஸ் குணவர்த்தன

2020ஆம் ஆண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தகுதியானவர் அல்ல என்று கூட்டு எதிரணியின்  தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவ வேண்டும் – இந்தோனேசிய அதிபரிடம் சம்பந்தன் கோரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு இந்தோனேசியா உதவ வேண்டும் என்று, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குவியுங்கள் – சிங்கப்பூர் பிரதமரிடம் சம்பந்தன் கோரிக்கை

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மகிந்த, கோத்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஆணைக்குழு பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, பாரிய நிதி மோசடிகள், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக

சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 10 பேர் மற்றும் ஒரு முதலமைச்சருக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கையளிக்கவுள்ளனர்.

கேட்டது 12,000 மில்லியன் ரூபா – கிடைத்தது 2,500 மில்லியன் ரூபா

சிறிலங்கா அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாணசபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் – கருத்து வெளியிட முதலமைச்சர் மறுப்பு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து எதையும் வெளியிட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் – உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பம்

பலாலி விமான நிலையத்துக்கான பாதை தெரியாமல், சிறிலங்கா அமைச்சர் மகிந்த அமரவீரவை உலங்குவானூர்தியில் ஏற்றிச் சென்ற விமானியின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டு, உயர்மட்ட விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.