மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அரசியல் கைதிக்கு ஒரு மணி நேரம் அனுமதி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 13 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஒருவர் நேற்று தமது தந்தையாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்ற ஒரு மணி நேரம் அனுமதிக்கப்பட்டார்.

ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச.

கோத்தாவைச் சந்திக்க மறுத்தார் விக்னேஸ்வரன்

வடக்கில் சிறிலங்கா இராணுவம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்க தான் விரும்பிய போதும் அவர் மறுத்து விட்டார் என்று கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன் புதிய அரசியலமைப்பு – இந்தியாவிடம் வலியுறுத்திய சம்பந்தன்

மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேயிடம், வலியுறுத்தியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சம்பந்தனுடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கேசவ் கோகலே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அரசியலை விட்டு விலகமாட்டேன் – விஜயகலா திட்டவட்டம்

அமைச்சர் பதவியை இழந்தாலும், தான் அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணா சுட்டுக்கொலை

கொழும்பு மாநகர சபையின் சுயேட்சைக் குழு உறுப்பினரான கிருஸ்ணா எனப்படும், கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் ( வயது-40) இன்று காலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கோத்தாவுக்கு ஆப்பு வைக்கும் குமார வெல்கம

நாட்டின் தலைவராக தெரிவு செய்யப்படுவர் குறைந்தபட்சம் ஒரு பிரதேச சபைத் தலைவராகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று கூட்டு எதிரணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

டெனீஸ்வரன் வழக்கு – உச்சநீதிமன்றத்தை நாடினார் முதலமைச்சர் விக்கி

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தேர்தலில் குதிக்கப் போகிறீர்களா? – அருட்தந்தை இம்மானுவேலிடம் கேட்ட முதலமைச்சர்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா என்று தம்மிடம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார், உலகத் தமிழர் பேரவையின் தலைவரான அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்.