மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

அடுத்தவாரம் நேபாளத்தில் மோடியைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெண்சுருட்டு விற்பனையை நிறுத்திய 107 நகரங்கள் – யாழ்ப்பாணம் முன்னணியில்

சிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன விவகாரம் குறித்து சிறிலங்கா தலைவர்களிடம் கேள்வி எழுப்பிய ஜப்பானிய அமைச்சர்

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவச் செயற்பாடுகள் இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே ஜப்பானின் நிலைப்பாடு என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா தெரிவித்துள்ளார்.

மத்தல குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சு – சிறிலங்கா அமைச்சர்

மத்தல விமான நிலையத் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்கால வெளிவிவகாரக் கொள்கை மீது மகிந்த கவனம் – முன்னாள் தூதுவர்களுடன் ஆலோசனை

எதிர்காலத்தில் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு, முன்னைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பேச்சு

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரிவசம் விளக்கமளித்துள்ளார்.

தம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு சம்பந்தனை அழைத்தார் மகிந்த

தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்து செயற்பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் அமெரிக்க இராணுவ ஜெனரல் ரொபேர்ட் ஹில்டன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

திருச்சி, சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவை – டிசம்பருக்குள் ஆரம்பிக்க முடிவு

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த உயர்மட்டப் பேச்சுக்களின் போது, பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கும், இவ்வாண்டு இறுதிக்குள் பலாலிக்கான அனைத்துலக விமான சேவையை ஆரம்பிக்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் பங்கேற்ற நிகழ்வில் சீன தேசிய கீதத்துக்கு முதலிடம் – வெடித்தது சர்ச்சை

சிறிலங்காவில் அரச நிகழ்வு ஒன்றில் முதலில் சீனாவின் தேசிய கீதம் பாடப்பட்டமை குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன.