மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

போரின் இறுதிக்கால இரகசியங்களை நியூயோர்க்கில் போட்டுடைத்தார் மைத்திரி

போரின் இறுதி இரண்டு வாரங்களில்,  விடுதலைப் புலிகள் கொழும்பில் கொத்தணிக் குண்டுத் தாக்குதலை நடத்த  திட்டமிட்டிருந்ததால், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, ரட்ணசிறி விக்கிரமநாயக்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று போட்டுடைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அரசியல் கைதிகள் விவகாரம் – செவ்வாயன்று மற்றொரு கலந்துரையாடல்

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மற்றொரு கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடனான நடைமுறை ஒத்துழைப்பு துரித வளர்ச்சி – சீனத் தூதுவர் பெருமிதம்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு கடந்த ஆண்டில் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான்.

எந்த தகவலையும் இந்தியக் குடிமகன் வெளிப்படுத்தவில்லை – சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக, இந்தியக் குடிமகன் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தி வலயம் – கறுத்தக்கொழும்பானுக்கு சவாலாகும் ரிஜேசி

சிறிலங்காவின் முதலாவது மாம்பழ உற்பத்தி வலயம், யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களில் உருவாக்கப்படவுள்ளது. “நாமே வளர்த்து நாமே சாப்பிவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ், இந்த விவசாய அபிவிருத்தி திட்டம், முன்னெடுக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

”நாமலுக்கு வயது போதாது என்று இந்தியாவில் கூறவில்லை” – குத்துக்கரணம் அடித்த மகிந்த

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக சிறிலங்கா ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

நீரிழப்பினால் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உயிருக்குப் பயந்தால் கோத்தா அமெரிக்காவுக்குப் போகட்டும் – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

பலாலி விமான நிலைய விவகாரம் – புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பம்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை சிறிலங்கா விமானப்படையே மேற்கொள்ளும் என்றும், இந்தியாவிடம் கையளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருப்பது, புதுடெல்லி அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.