மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இன்று மோடி, சுஷ்மாவைச் சந்திக்கிறது

இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் ஆகியோரை உள்ளடக்கிய சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இன்று இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

‘கூட்டமைப்பிடம் எந்த கொள்கையும் இல்லை – அவர்களின் கைப்பாவையாக இருக்கவும் முடியாது’

மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிலாசைகளை மதிக்காதவர்களின் கைகளில் நான், ஒரு கைப்பாவையாக இருக்க முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நான்காவது தெரிவே மிகச் சிறந்தது – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வெளியிட்ட நான்கு தெரிவுகளில் நான்காவதாக குறிப்பிட்ட தெரிவே மிகச் சிறந்தது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரன் எப்போது தலைவரானார்? – கேள்வி எழுப்பிய விக்னேஸ்வரன்

கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இரா.சம்பந்தனுடன் நடத்தவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடா போன்ற அதிகாரப் பகிர்வு முறையே சிறிலங்காவுக்கு அவசியம் – சம்பந்தன்

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு கனடா போன்ற நாடுகளில் காணப்படும் அதிகாரப்பகிர்வு முறைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். என்று, சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றப் படியேறிய முன்னாள் நீதியரசர் – மீண்டும் முன்னிலையாக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று முன்னிலையான வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், அமைச்சர்கள் அனந்தி மற்றும் சிவநேசனையும் மீண்டும் வரும் 18 ஆம் நாள் முன்னிலையாகும்படி நீதியரசர் உத்தரவிட்டார்.

விடியும் வரை நடத்தவிருந்த சத்தியாக்கிரகம் நள்ளிரவுக்கு முன்னரே முடிந்தது

கொழும்பில் நேற்று மாலை கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்ட ‘மக்கள் சக்தி கொழும்பு நோக்கி’ பேரணியைத் தொடர்ந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரகம் இன்று விடிகாலை வரை தொடரும் என்று மகிந்த ராஜபக்ச அறிவித்திருந்த போதும், நள்ளிரவுக்கு முன்னரே முடிந்து போனது.

கொழும்பில் பலத்த பாதுகாப்பு – கூட்டு எதிரணியின் இரகசியத் திட்டத்தை தடுக்க நடவடிக்கை

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணி கொழும்பில் இன்று நடத்தவுள்ள பேரணியை எதிர்கொள்ளும் வகையில் சிறிலங்கா காவல்துறை முழுமையான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்கா தூதுவருக்கு மாலைதீவில் ஏற்பட்ட அவமானம் – நிகழ்வை புறக்கணித்து வெளியேறினார்

மாலைதீவில் சீனாவினால் கட்டப்பட்ட புதிய பாலத் திறப்பு விழாவின் போது, சிறிலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் நிகழ்வைப் புறக்கணித்து வெளியேறினர்.

விக்கியைச் சந்திக்க அழைக்கிறார் சம்பந்தன்

“உடனடியாக ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்க நான் நினைக்கவில்லை. புதிய கட்சியை தொடங்குவது எனது வயதில் மிகவும் இலகுவானதாக இருக்காது இது கலந்துரையாடல்களாகத் தான் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.