இராணுவத்தின் இருப்பை தமிழர்கள் விரும்புகிறார்களாம் – ஒக்போர்ட்டில் கதை விட்ட ரணில்
போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.
போர்க்கால மீறல்களுக்கு பொறுப்புக்கூறும் செயல்முறைகளில் அனைத்துலகத் தலையீட்டுக்கு அவசியமில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சபைக்கான ஆறு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாமல் இருப்பதால், புதிய தலைமை நீதியரைசரை நியமிக்கும் நடவடிக்கைகளில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில் ஜப்பானிய கடற்படை, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நான்கு நாட்கள் கூட்டுப் பயிற்சி ஒன்றை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக, ஜப்பானின் ஜிஜி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் தொடர்பான கருத்தரங்கில், இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடங்குவதற்கு, சிறிலங்கா இராணுவத்தின் தலையீடு தேவையில்லை என்றும், காவல்துறையே அதனை கையாளும் என்றும் சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபைக்கான அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லை என்றால், அடுத்த மாகாணசபைத் தேர்தலில், புதிய அரசியல் முன்னணி ஒன்றின் மூலம் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதுலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
சம்பூரில் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டதை அடுத்து, சிறிலங்காவின் முதலாவது இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சீனா அமைக்கவுள்ளது.