மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அகதிகளை இப்போது அனுப்ப வேண்டாம் – மோடியிடம் கோருவாராம் மைத்திரி

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய  சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்துக் கூறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனப்படுகொலைத் தீர்மானம்: இந்தியா அதிருப்தி – சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் உறுதி

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானத்தை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் 58.3 மில்லியன் டொலரைப் பதுக்கியுள்ள இலங்கையர்கள்

சுவிற்சர்லாந்து வங்கிகளில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் ஹியூகோ ஸ்வரை சந்தித்தார் மங்கள

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்காவில் ஏப்ரல் 4ம் நாள் நாடாளுமன்றத் தேர்தல்?

சிறிலங்கா நாடாளுமன்றம் இந்த வாரம் கலைக்கப்பட்டால், வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவாவை சமாளிக்க மங்கள சமரவீர தீவிர முயற்சி – தொடர் வெளிநாட்டு பயணத்தை ஆரம்பித்தார்

வெளிநாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுவதற்கு ஆதரவு திரட்டவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தொடர் வெளிநாட்டுப் பயணங்களை ஆரம்பித்துள்ளார்.

குழப்பத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கு பழைய வேட்புமனுவின் படியே வரும் 28ம் நாள் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு?

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா விசாரணைக் குழுவுடன் கூட்டமைப்பு அவசர சந்திப்பு – அறிக்கையை பிற்போடக்கூடாது என்று கோரிக்கை

சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நாவின் விசாரணை அறிக்கை, திட்டமிட்டபடி அடுத்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா விசாரணைக் குழுவின் தலைவர் சன்ட்ரா பெய்டாசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா உதவ வேண்டும் என்பதே ஐ.நாவின் நிலைப்பாடு – பான் கீ மூனின் பேச்சாளர்

உள்நாட்டு விசாரணைகளை நடத்தப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தாலும், ஐ.நா விசாரணைகளுக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்பதே ஐ.நா பொதுச்செயலர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நிலைப்பாடு என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.