மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மனித உரிமைகள், ஜனநாயகம், பொறுப்புக்கூறல் குறித்து சிறிலங்காவுடன் அமெரிக்கா பேச்சு

சிறிலங்கா அரசாங்கத்துடன், மனித உரிமைகள், ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்கள் குறித்து, அமெரிக்கா கலந்துரையாடியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

செப்ரெம்பருக்குப் பின்னரே உள்நாட்டு விசாரணை – இழுத்தடிக்கத் தொடங்கியது சிறிலங்கா

சிறிலங்காவில் போரின் போது இடம் பெற்ற மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க, உள்நாட்டு விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படாது என்றும், வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் முடிந்த பின்னரே அது ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவை இராணுவ முகாமில் அடைக்குமாறு கேட்டுக் கொண்டேன் – என்கிறார் கோத்தா

தன் மீது சுமத்தப்படும் ஊழல் மற்றும், அதிபர் தேர்தலை அடுத்து ஆட்சியைத் தக்கவைப்பதற்கான சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, நிராகரித்துள்ளார்.

நன்றாக கையாளப்பட்டால் சிறிலங்கா உலகிற்கு முன்னுதாரணமாக அமையும் – ஐ.நா நிபுணர்

நன்றாக கையாளப்பட்டால், பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும், நிலையான அமைதியை எட்டுவது என்பதில் சிறிலங்கா விவகாரம் ஒரு முன்னுதாரணமானதாக இருக்கும் என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் எந்த மறைமுக நிகழ்ச்சி நிரலும் கிடையாது – என்கிறது சீனா

சிறிலங்காவில் தமக்கு எந்த மறைமுகமான நிகழ்ச்சி நிரலும் கிடையாது என்று, சிறிலங்காவுக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ரென் பகியாங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் அசாதாரணமான மாற்றங்கள் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜோன் கெரி

கடந்த சில மாதங்களில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான – சாதகமான மாற்றங்கள், இலங்கைத்தீவில் உள்ள மக்கள் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக ஒன்றுபடும் புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீன, சிறிலங்கா படைகள் பங்கேற்கும் ‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு’ போர்ப்பயிற்சி

‘பட்டுப்பாதை ஒத்துழைப்பு -2015’ என்ற பெயரில், சிறிலங்கா இராணுவத்துக்கும், சீன மக்கள் ஆயுதக் காவல்படைக்கும் இடையில் புதிய போர்ப் பயிற்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஜோன் கெரி – அதன் பின்னரே நாடாளுமன்றம் கலைப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அவரது வருகைக்குப் பின்னரே சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 14 : இலங்கையர்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படுமா?

சிறிலங்காவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏப்ரல் 14ம் நாள் தொடக்கம், வருகை நுழைவிசைவு வழங்கப்படும் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஜூன் இறுதியிலேயே உள்நாட்டு விசாரணை அறிவிப்பு – பின்வாங்குகிறார் மைத்திரி

சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.