மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

“நாடுகளுக்கிடையே மோதலைத் தூண்டிவிட மாட்டோம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி

நாடுகளுக்கிடையே சிறிலங்கா மோதல்களைத் தூண்டி விடாது என்றும் அவ்வாறு மோதல்களைத் தூண்டுவது, சிறிலங்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் விரோதமானது எனவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அது ஐ.நாவின் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது சீன நீர்மூழ்கி

கொழும்புத் துறைமுகத்தில் ஒரு வாரமாகத் தரித்து நின்ற சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும், போர்க்கப்பலும், நேற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் இன்று தமிழ்நாட்டுக்குப் பயணம் – அரசியல் தலைவர்களை சந்திக்கமாட்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்குழுவின் நெகிழ்வுத்தன்மை – சிறிலங்கா கடும் அதிர்ச்சி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு காலதாமதமாக அனுப்பப்படும் சாட்சியங்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்று ஐ.நா அறிவித்துள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.

மீனவர்களுக்கு மரணதண்டனை: இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் பரிமாறியது இந்தியா

சிறிலங்கா நீதிமன்றத்தினால், தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவருக்கு அண்மையில், விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை குறித்து, இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை – சிறிலங்கா கூறுகிறது

சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் குழு அண்மையில் விடுத்திருந்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சீன நீர்மூழ்கி விவகாரம்: மகிந்தவின் உள்நோக்கம் குறித்து இந்தியா பெரும் கவலை

சீன நீர்மூழ்கி மீண்டும் கொழும்பு வந்துள்ளது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து இந்திய அரசாங்கத்துக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் நீர்மூழ்கி தரித்திருப்பது வழக்கத்துக்கு மாறானதல்ல – என்கிறது சீன பாதுகாப்பு அமைச்சு

சீன நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல என சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இருநாட்டு சிறப்புப் படைப்பிரிவுகளும் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி ஒன்று நாளை (நவம்பர் 3ம் நாள்) ஆரம்பிக்கப்படவுள்ளது.