ஐ.நாவில் அமெரிக்காவின் பிரேரணை – பதுங்கியது சிறிலங்கா
பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவியுள்ளது சிறிலங்கா.
பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக, ஐ.நா பொதுச்சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவியுள்ளது சிறிலங்கா.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதிலாக, வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில், வெளிவிவகாரச் செயலரே, சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் உள்ளது போன்று ஒவ்வொரு ஆண்டும், சிறிலங்கா அதிபரின் மனநிலையைப் பரிசோதிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று பிற்பகல் பிணையில் செல்ல கோட்டு நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டார்.
மைத்திரிபால சிறிசேன ஒக்ரோபர் 26 ஆம் நாள் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், மகிந்த ராஜபக்ச பாரிய முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டார் என்று ராஜபக்ச விசுவாசியான, சட்டநிபுணர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.
பதவி நிலைக்கும் சிறிலங்கா கடற்படைக் கோவைக்கும் துக்கமான நாள் இது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படை அதிகாரி, றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிப்பதற்கு அவரது சட்டவாளர் நேற்று கடும் முயற்சிகளை முன்னெடுத்த போதும், நீதிவான் அதற்கு மறுத்து விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் டிசெம்பர் 05ஆம் நாள் வரை, விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.