மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஐ.நா கண்காணிப்பாளர்களை அழைக்கமாட்டேன் – சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர்

அதிபர் தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா கண்காணிப்புக் குழுவை அழைக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

புதிய ஆட்சியில் எஞ்சியிருக்கும் புலிகளையும் அழிப்போம் – சூளுரைக்கிறது ஐதேக

சிறிலங்காவில் எதிரணி அமைக்கவுள்ள புதிய ஆட்சியில், அனைத்துலக அளவில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்படுவார்கள் என்றும், புலிகளின் கனவு நிறைவேற ஒருபோதும் விடமாட்டோம் என்றும் நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார் ஐதேகவின்  பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

கொழும்புத் துறைமுகத்தில் ரஸ்ய நாசகாரிப் போர்க்கப்பல்

ரஸ்யக் கடற்படையின் ‘யரொஸ்லாவ் முட்ரி’ என்ற நாசகாரி போர்க்கப்பல் நான்கு நாள் நல்லெண்ணப் பயணமாக நேற்று, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

மகிந்தவை அனைத்துலக நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்ல விடமாட்டோம் – ஐதேக சூளுரை

எந்தவொரு சிறிலங்கா தலைவரையும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்க்கட்சியான ஐதேக அறிவித்துள்ளது.

பாப்பரசரின் படங்களை அகற்றுங்கள் – அரசியல் கட்சிகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை கண்டிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு பாப்பரசர் பிரான்சிசின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா கத்தோலிக்கத் திருச்சபை , அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் – எதிர்பார்ப்புகள் பொய்யாகின

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால்  சமர்ப்பிக்கப்பட்ட 2015ம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அரசதரப்புக்குப் தாவமாட்டோம் – திஸ்ஸ உள்ளிட்ட 3 ஐதேக பிரமுகர்களும் அறிவிப்பு

ஆளும்கட்சியில் தாம் இணைந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.

தமிழீழத்தை வழங்குவதாக மேற்குலகுடன் எதிரணி இரகசிய உடன்பாடு – சிறிலங்கா அரசு குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து எதிரணியினர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பது, அல்ஜசீரா தொலைக்காட்சிக் கலந்துரையாடல் மூலம் அம்பலமாகியுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

மகிந்தவுக்கு கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யும் கூட்டணிக் கட்சிகள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிரணி அறிவித்துள்ள நிலையில், ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் தமது முன்னைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இன்று மாலை 5 மணி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெருமெடுப்பிலான கட்சித் தாவல் இடம்பெறலாம் என்று ஊடகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.