மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் – ஏமாற்றினார் சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பாக தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

19வது திருத்தம் குறித்து கருத்து வாக்கெடுப்பு தேவையில்லை – உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபர்

19வது திருத்தச்சட்ட மூலம் நாட்டு மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும் வகையிலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால், இது தொடர்பாக கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று, சிறிலங்கா சட்டமா அதிபர் யுவாஞ்சன விஜேதிலக நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சைக்கு இன்று முடிவு – சபாநாயகர் அறிவிப்பார்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படப் போவது யார் என்பது குறித்து, இன்று சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று அறிவிக்கவுள்ளார்.

சிறிலங்கா, இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார் – சீனா

சிறிலங்கா, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன், இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் புனர்வாழ்வுக்கு கிளிநொச்சியில் தேசிய நலன்புரி நிலையம்

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்வுக்கான தேசிய நலன்புரி நிலையம் கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கப்பட்டது

ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான உதயங்க வீரதுங்கவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆயுதப்படைகளிடம் இருந்து காவல்துறை அதிகாரங்களை பறிக்க சிறிலங்கா அரசு முடிவு

ஆயுதப்படைகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரங்களை, மீளப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

கொழும்பு வந்து சேர்ந்தார் ஐ.நா உதவிச் செயலர்

ஆறு நாள் பயணமாக ஐ.நா உதவிச்செயலர் ஹோலியாங் சூ இன்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளார். இன்று மாலை 5 மணியளவில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் 28 முதலீட்டுத் திட்டங்களை சிறிலங்கா மீளாய்வு

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அளிக்கப்பட்ட 35 முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்ய சிறிலங்கா அரசாங்கம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களின் திட்டங்களாகும்.

நாளை மறுநாள் பாகிஸ்தான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் பாகிஸ்தானுக்கு தனது முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.