மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அஸ்வர் விட்டுக்கொடுத்த பதவியை ஏற்க மறுக்கிறார் அமீர் அலி

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பண்டா குடும்பம் மீது பழிபோடுகிறார் மகிந்த

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, கோத்தபாய ராஜபக்சவை தான் அறிமுகப்படுத்தியதாகவும், தனது சகோதரர்களான பசிலையும், சமலையும் மக்களே அரசியலுக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

கிழக்கு மாகாணசபை அடுத்தவாரம் கவிழ்கிறது? – வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்படும்

கிழக்கு மாகாணசபை கலைக்கப்படலாம் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின், மாகாணசபை உறுப்பினர்கள், போர்க்கொடி உயர்த்தியுள்ளதையடுத்தே இந்த நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

சரியான பாதையிலேயே செல்கிறதாம் சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை

சிறிலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை சரியான பாதையிலேயே செல்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மகிந்த குடும்பத்தை போர்க்குற்ற விசாரணையில் இருந்து பாதுகாப்பேன்– மைத்திரிபால உறுதிமொழி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையோ, அவரது குடும்பத்தினரையோ அல்லது போரை வென்றெடுத்த படையினரையோ, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல தான் அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அஸ்வர் பதவி விலகினார் – அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர், இன்று தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.இவர் தனது பதவிவிலகல் கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திசநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

பாகிஸ்தானில் சிறிலங்கா விமானப்படைத் தளபதி முக்கிய ஆய்வு

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்சல் கோலித குணதிலக மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அவருக்கு இன்று பாகிஸ்தான் விமானப்படைத் தலைமையகத்தில் மரபுரீதியான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

மருந்து நிறுவனங்களிடம் 100 கோடி ரூபா சுருட்டிய ‘நபர்’ – அம்பலப்படுத்துகிறார் மைத்திரிபால

தேசிய மருந்துக் கொள்கையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாமல் தடுப்பதற்காக சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள ஒருவர், 100 கோடி ரூபாவை மருந்து நிறுவனங்களிடம் லஞ்சமாகப் பெற்றுள்ளதாக, முன்னாள் சுகாதார அமைச்சரும், எதிரணியின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

37 அகதிகளுடன் படகை சிறிலங்கா கடற்படையிடம் இரகசியமாக ஒப்படைத்தது அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற போது, இந்தோனேசியக் கடற்பரப்பில் வைத்து அவுஸ்ரேலியக் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்ட 37 இலங்கையர்கள் நேற்று சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன் கடற்படை இல்லத்தில் சரத் என் சில்வா – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை இல்லத்தில் தங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.