மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப் பகிர்வு – கூட்டமைப்புடன் பேசப்போகிறதாம் சிறிலங்கா அரசு

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியின் கீழேயே அதிகாரங்களைப் பகிர சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் சிறிலங்காவின் அரச நிறுவன மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு சம்பந்தன் கடும் எதிர்ப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவதற்கு, சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

வடக்கு,கிழக்கை இணைக்கவோ, 13க்கு அப்பால் செல்லவோ அனுமதியோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி

அரசியலமைப்பு மாற்றத்தின்போது, 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரங்களைப் பகிரவோ, வடக்கு கிழக்கை இணைக்கவோ சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது என்று, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பே உருவாக்கப்படும் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும், நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய அனைத்துலக உதவியுடன் சிறப்பு நிதியம் – சிறிலங்கா பிரதமர்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை  பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், சிறப்பு நிதியம் ஒன்று இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் வரும் 21ஆம் நாள் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

சுதந்திரக் கட்சி தலைமையை கைப்பற்ற மகிந்த இரகசியத் திட்டம்

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் இரகசிய முயற்சி ஒன்றில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யோசித ராஜபக்ச விரைவில் கைது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உடன்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்கமாட்டார் – மைத்திரி

டட்லி  – செல்வா, பண்டா- செல்வா உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர், உருவாகியிருக்கமாட்டார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபையாக மாறுகிறது நாடாளுமன்றம் – இன்று காலை சிறப்பு அமர்வு

சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.