மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

49 வது இடத்தில் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிரான வழக்கு

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீதான இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கோப்பு 49 ஆவதாக பட்டியலிடப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரை சந்திக்க நேரம் கோருகிறது தமிழ் அரசுக் கட்சி

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு, இலங்கை தமிழ் அரசுக் கட்சி  சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் 12வது சர்வதேச கடல்சார் மாநாடு ஆரம்பம்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன், சிறிலங்கா கடற்படை நடத்தும்  காலி கலந்துரையாடல் எனப்படும், 12வது சர்வதேச கடல்சார் மாநாடு நேற்று ஆரம்பமாகியுள்ளது.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

முன்னாள் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு சிறைத்தண்டனை

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில், முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்  ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு, உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

சிறிலங்காவில் முதல்முறையாக சிக்கிய பெருந்தொகை போதைப்பொருள்கள்

சிறிலங்கா மண்ணில் இதுவரையில்லாதளவுக்கு பெருந்தொகை போதைப்பொருட்கள் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

ஐ.நாவிற்குப் புறப்பட்டார் அனுர- ஜப்பானுக்கும் பயணம்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக, நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நியூயோர்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்றிரவு நியூயோர்க் பயணமாகிறார் அனுர- ஜப்பானுக்கும் செல்கிறார்

ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரி்ல் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

மின்சார விநியோகம் அவசர சேவையாக பிரகடனம்

சிறிலங்காவில் மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை முடக்கிய சைபர் தாக்குதல்?

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதி கணினி வலையமைப்பு இரண்டு மணி நேரம் செயலிழந்ததால் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.