மகிந்தவைத் தூக்கில் போட வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை தூக்கில் போட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் அமெரிக்காவிற்குள் நுழைவது தடை செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் ( ரூ. 19.6 ட்ரில்லியன்) வெளிநாட்டுக் கடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அதை விரைவிலேயே தொடங்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு முடிவு செய்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ரங்க திசாநாயக்க தெரித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டில் நடந்த வாசிம் தாஜுதீன் கொலையை மூடிமறைப்பதில் ஈடுபட்ட சிலர், தற்போதைய அரசாங்கத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.
வாசிம் தாஜுதீன் கொலையை நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனகா அகிஹிகோவை (Dr. Tanaka Akihiko) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் நடத்திய பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக விசாரணை ஏதும் நடத்தப்படாது என, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வினீத் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
பட்டலந்த வதைமுகாம் குறித்து விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.