மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அவசரமாக கூடும் நாடாளுமன்றில் 1000 பில்லியன் ரூபாவுக்கு குறைநிரப்பு பிரேரணை

வரும் 18ஆம் திகதி  கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் அவசரக் கூட்டத்தில், அரசாங்கம் 1000 பில்லியன் ரூபாவிற்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.

மகேஸ்வரன் படுகொலை வழக்கு – மரணதண்டனையை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சிறிலங்காவின் விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவ கனடா உறுதி

பேரிடரால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவின்   விவசாயத் துறையின் மீட்சிக்கு உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் கனடா உறுதியளித்துள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல  சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முள்ளிக்குளத்தில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அனுமதி

மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்களை நிறுவுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பேரிடர் நிவாரண வழங்கலில் என்பிபி அரசியல்வாதிகள் தலையீடு

உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிராமப்புற செயற்பாட்டாளர்களின் கடுமையான தலையீடுகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இழப்பீடு வழங்குவதில்  சிக்கல்  ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிராம அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் சுமித் கொடிகார குற்றம்சாட்டியுள்ளார்.

நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தம்- கிராம அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

பேரிடர் நிவாரணப் பணிகளில் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக கிராம அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது இஸ்ரேல்

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

85 மெ.தொன் நிவாரணப் பொருட்களுடன் வந்தது சீன விமானம்

டிட்வா புயலினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக, சீனா 85 மெட்ரிக் தொன்  நிவாரணப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

தமிழக அரசின் 300 மெ.தொன் உதவிப்பொருட்கள் சிறிலங்காவிடம் கையளிப்பு.

சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.