மேலும்

மகிந்தவின் மூன்று விசுவாசிகளை தேசியப்பட்டியலில் இருந்து கடைசிநேரத்தில் நீக்கினார் மைத்திரி

maithri-mobileமகிந்த ராஜபக்சவினால் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்ட மூவரின் பெயர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில், நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது கொழும்பு ஆங்கில வாரஇதழ்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்கள் மத்தியில் உரையாற்றுவதற்கு முன்னதாக, மைத்திரிபால சிறிசென கடும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவை சந்தித்து, தேசியப் பட்டியலில் இடம்பெறும் வேட்பாளர்கள் குறித்து கவனமாகப் பரிசீலித்தார்.

அதில் மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக ஆகியோரது பெயர்களை நீக்குமாறு அவர் உத்தரவிட்டார்.

அதற்குப் பதிலாக உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்களையும் அவர் எடுத்துக் கூறினார் என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *