மேலும்

சிறிலங்காவுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்- அமெரிக்க இராஜாங்கச் செயலர்

அமெரிக்காவும் சிறிலங்காவும்  சுதந்திரமான, பாதுகாப்பான  இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 78 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“ சிறிலங்கா மக்கள் தங்கள் தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது ஒரு பெரிய மரியாதையாகும்.

அமெரிக்காவும் சிறிலங்காவும் பரஸ்பர மரியாதை மற்றும் சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளன.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், எங்கள் கூட்டாண்மை வலுவடைந்துள்ளது, இது அண்மையில் பேரழிவை ஏற்படுத்திய டிட்வா சூறாவளிக்குப் பின்னர், சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக உயிர்காக்கும் உதவி மற்றும் அமெரிக்க நிபுணத்துவம் மற்றும் வளங்களை வழங்கியதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது.

வரும் ஆண்டில், எங்கள் பொருளாதார உறவுகளை வளர்க்கவும், பிராந்திய உறுதித்தன்மையை ஊக்குவிக்கவும், எங்கள் மக்களின் அபிலாசைகளை ஆதரிக்கவும் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்” என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ரூபியோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *