மேலும்

நீதி மறுக்கப்படும் போது அனைத்துலக பொறுப்புக்கூறல் தவிர்க்க முடியாதது

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா நீதி மறுக்கப்படும் அதே வேளையில் சர்வதேச பொறுப்புக்கூறல் இன்றியமையாதது.அரசாங்கங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து, பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தடுத்து வருகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவில் உள்ள  ஐ.நாவுக்கான பிரதி பணிப்பாளர் லூசி மக்கெர்னன் (Lucy McKernan) தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களைச் சேகரிக்கும் திட்டத்தை ஒக்டோபர் 6 ஆம் திகதி  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நீடித்துள்ளது.

ஒருமித்த கருத்தின்படி, நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், பொறுப்புக்கூறலைத் தடுக்க-  அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் முயற்சித்த போதிலும், ஒரு நாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உள்நாட்டுப் போர் 1983 மற்றும் 2009 க்கு இடையில் நடந்தது.

இரு தரப்பினரும் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், கட்டாயமாக காணாமல் போதல்கள் மற்றும் குழந்தைகளை ஆட்சேர்ப்பு செய்தல் உள்ளிட்ட எண்ணற்ற அட்டூழியங்களைச் செய்தனர்.

புலிகளின் முழுமையான தோல்வியில் முடிவடைந்த போரின் இறுதி மாதங்களில், புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய போதும், சிறிலங்கா இராணுவம் “பாதுகாப்பான வலயங்கள்” என்று அறிவித்த பகுதிகள் மீது குண்டுவீசித் தாக்கிய போதும், சுமார் 40,000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்கள் இந்தக் குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுத்து, பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகளைத் தடுத்து வருகின்றன.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அச்சுறுத்தவும் கண்காணிக்கவும் அரசு பாதுகாப்பு நிறுவனங்களைப் பயன்படுத்தியுள்ளன.

மோதல் தொடர்பான குற்றங்களைத் தொடர ஒரு கலப்பு நீதி பொறிமுறையை நிறுவுவதற்கான உறுதிமொழிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்கிய பின்னர், மனித உரிமைகள் பேரவை 2021 இல் ஐ.நா. சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை நிறுவியது.

2024 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் திசாநாயக்கவின் தற்போதைய அரசாங்கம், முந்தைய சில நிர்வாகங்களை விட மிதமான தொனியை ஏற்றுக்கொண்டது, ஆனால் ஐ.நா. திட்டத்தை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

போருக்குப் பிந்தைய “நல்லிணக்கத்தை” முன்னெடுப்பதற்கும், சில அடையாள வழக்குகளைத் தொடுப்பதற்கும் அது உறுதியளித்திருந்தாலும், சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது பாதிக்கப்பட்டவர்களுக்கு முந்தைய மீறப்பட்ட வாக்குறுதிகளை நினைவூட்டுகிறது.

நம்பிக்கையை வளர்க்கும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் நம்பகத்தன்மையை நிரூபிப்பதன் மூலம், உள்நாட்டு உண்மையை வெளிப்படுத்தல் மற்றும் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கான அதன் வாக்குறுதிகளை அனுரகுமார திசாநாயக்க நிர்வாகம் மதிக்க வேண்டும்.

சிறிலங்காவில் குறைந்தது 20 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஆனால் எதுவும் இன்னும் வெற்றிகரமாக விசாரிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள செம்மணி புதைகுழியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும், இதில் மரபணுச் சோதனைக்கான உபகரணங்களை வழங்குவதும் அடங்கும்.

வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் மிரட்டலை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறை, பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு அரசாங்கம் உத்தரவிட வேண்டும்.

மேலும், அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்தல், சுயாதீனமான வழக்குத்தொடுநர் பணியகத்தை நிறுவுதல் மற்றும் அடையாள வழக்குகளை விசாரித்தல் என்ற அதன் வாக்குறுதிகளை அது நிறைவேற்ற வேண்டும்.

சிறிலங்காவில் நீதி மறுக்கப்பட்டாலும், உலகளாவிய அதிகார வரம்பு என்ற கொள்கையின் கீழ் வெளிநாடுகளில் சாத்தியமான வழக்குகளை ஆதரிப்பதற்கு ஐ.நா.வின் சாட்சிய சேகரிப்பு திட்டம் அவசியமாக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *