முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2006ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பிக்க ரணவக்கவை கைது செய்யுமாறு கொழும்பு குற்றப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டவர்களில் சம்பிக்க ரணவக்க முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.