சீன விவகாரம் குறித்து சிறிலங்கா தலைவர்களிடம் கேள்வி எழுப்பிய ஜப்பானிய அமைச்சர்
அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவச் செயற்பாடுகள் இல்லாத ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே ஜப்பானின் நிலைப்பாடு என்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்த பின்னர், ஜப்பானின் என்எச்கே தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமது சந்திப்புகளின் போது, சீன விவகாரம் குறித்து சிறிலங்கா தலைவர்களிடம் கேள்வி எழுப்பியதாகவும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.