அமெரிக்க பாதுகாப்புச் செயலருடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் சந்திப்பு
அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மாட்டிசை, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த 2ஆம் நாள் தொடக்கம் 4ஆம் நாள் வரை நடந்த சங்கிரி லா கலந்துரையாடல் எனப்படும், 16 ஆவது ஆசிய பாதுகாப்புக் கருத்தரங்கின் போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறுகிய நேரமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இருவரும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, உரையாடியுள்ளனர்.
எனினும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவல்களும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
கடந்த ஜனவரியில் அமெரிக்க பாதுகாப்புச் செயலராகப் பதவியேற்ற பின்னர், ஜேம்ஸ் மாட்டிசை சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த உயர்மட்டப் பிரமுகர் ஒருவர் சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.