சற்று நேரத்தில் சிறிலங்கா அதிபராக பதவியேற்கிறார் கோத்தா
சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக கோத்தாபய ராஜபக்ச இன்னும் சற்று நேரத்தில் அனுராதபுர ருவன்வெலிசய விகாரையில் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.
அனுராதபுர சிறிமாபோதியிலும், ருவன்வெலிசய விகாரையிலும் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கோத்தாபய ராஜபக்ச பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, பெருமளலானோர் ருவன்வெலிசயவில் கூடியுள்ளனர்.
பதவியேற்பு நிகழ்வுக்கு பின்னர் நாட்டு மக்களுக்கு புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச உரையாற்றுவார்.
இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.