போலி தேர்தல் முடிவுகள் – மகிந்த தேசப்பிரிய எச்சரிக்கை
சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவடைந்து வாக்குகளை எண்ணும் பணி இடம்பெற்று வரும் நிலையில் சமூக ஊடகங்களில் போலியான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், அவை அதிகாரபூர்வமானவை அல்ல என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும் என்று அறிவித்துள்ள அவர், பதுளை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் சிறியளவிலான மழை வெள்ளத்தினால் வாக்குப் பெட்டிகளை கொண்டு வரும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த தேர்தல் முடிவுகள் வெளிவரவதில் சிறிய தாமதங்கள் ஏற்படக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை பல மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச அஞ்சல் வாக்களிப்பில் முன்னிவை வகித்து வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன.