வாக்களிப்பு முடிந்தது – எண்ணும் பணி ஆரம்பம்
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் சுமார் 80 வீதமாக வாக்காளர்கள் வாக்களித்திருக்கக் கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்களிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து, வாக்குப் பெட்டிகள் வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அதேவேளை, அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணி 5.15 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
முதலாவது தேர்தல் முடிவு நள்ளிரவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.