மேலும்

இன்று மாலை கூடும் ஐந்து தமிழ்க் கட்சிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி ஆராயவுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில்-  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே, இன்று மாலை கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் ஐந்து கட்சிகளும் சந்தித்துப் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் எவ்வாறு முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார்.

பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்ட பின்னர்- வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி  இறுதி முடிவை வெளியிடவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

அத்துடன், 13அம்சக் கோரிக்கைகளை தயாரித்துள்ள கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகளும் கூடி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அதற்கமையவே, இன்று முக்கிய கலந்துரையாடலை நடத்துவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் கொழும்பில் கூடவுள்ளதாக புளொட்  தலைவர் த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *