மேலும்

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை வரும் 17ஆம் நாள் ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து கள வேலைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின்  பணிப்பாளர் நாயகம் எச்எம்சி நிமலசிறி தெரிவித்துள்ளார்.

“வரும் 17ஆம் நாள், விமான நிலையத்தை இயக்கி வைப்பதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் நிறைவு செய்துள்ளோம்.

இந்தியாவில் இருந்து வாரத்தில் 7 விமானங்களை பலாலிக்கு இயக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் அனுமதியும் கிடைத்துள்ளது.

விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் இரண்டு அதிகாரிகள் ஆரம்பத்தில் பொறுப்பாக இருப்பார்கள்.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *