மேலும்

கோத்தாவின் குடியுரிமை – இன்று மாலை 6 மணிக்கு தீர்ப்பு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அளிக்கப்படவுள்ளது.

காமினிய வியாங்கொட, பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோர் தாக்கல் செய்திருந்த இந்த மனு நேற்று முன்தினமும், நேற்றும் இன்று காலையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.

இந்த விசாரணைகளை அடுத்து, கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிற்பகல் 6 மணியளவில் அளிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *