மேலும்

நீர்கொழும்பில் வதந்தியால் பதற்றம்

நீர்கொழும்பில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகள் மீது இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக பரவிய வதந்தியால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

எனினும், இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதில் எந்த உண்மையும் கிடையாது எனவும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மற்றும் பாடசாலைகளின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.

எனினும் நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலைகளில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பல பாடசாலைகளில் இருந்து, மாணவர்களை அவர்களின் பெற்றோர் பொறுப்பேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.

அதேவேளை, கொழும்பில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளுக்குள் மாணவர்கள் தவிர வேறெவரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *