மேலும்

இராணுவ சீருடையில் 5 இலக்குகளை தாக்க திட்டம் – பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை

ஈஸ்டர் நாளன்று தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள், இராணுவ சீருடைகளுடன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில், குறைந்தது ஐந்து இலக்குகள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்னொரு அலையாக தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்று அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இராணுவ சீருடை அணிந்து கொண்டு, வான் ஒன்றைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை எந்த தாக்குதலும் நடக்கவில்லை. அதேவேளை, சிறிலங்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  தேடுதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா பாதுகாப்புத் துறையின் இந்த புதிய எச்சரிக்கைகளை இரண்டு அமைச்சர்களும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றி தமக்கு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *