மேலும்

வரவுசெலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் – எஸ்.பி.திசநாயக்க

சிறிலங்கா அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்கும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 12ஆம் நாள் வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களிப்பது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 4 உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதனால், மகிந்த அணியினர் கடும் சீற்றமடைந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, வரவுசெலவுத் திட்ட மூன்றாவது வாசிப்புக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக, எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *