மேலும்

சிறிலங்காவுக்கு கடன் வழங்க இழுத்தடிக்கிறது சீனா

சிறிலங்கா அரசாங்கத்துக்கு, முன்னரைப் போன்று இலகுவாகவும் விரைவாகவும், கடன்களை வழங்குவதற்கு சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “கடந்தகாலங்களில் சிறிலங்காவுக்கான கடன்களை சீனா துரிதமாக வழங்கியது.

இப்போது, சீனா கடன்களை வழங்க தாமதிக்கிறது.  மேலதிக நிபந்தனைகளையும் விதிக்கிறது.

இதற்குப் பிரதான காரணம், தற்போதைய அரசாங்கம் சீனாவை விமர்சித்தமை தான்.

சிறிலங்காவின் கடன் சுமைக்கு சீனா காரணம் அல்ல. சீனாவை விட ஜப்பானிடம் இருந்தே அதிக கடன்களை பெற்றிருக்கிறது சிறிலங்கா” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *