பதற்ற நிலை குறித்து சிறிலங்கா தலைவர்களுக்கு விளக்கிய இந்திய தூதுவர்
சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா தலைவர்களைச் சந்தித்து, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரையே இந்தியத் தூதுவர் சந்தித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அதனை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து அவர் சிறிலங்கா தலைவர்களுக்கு விளக்கமளித்துள்ளார் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.