மேலும்

ஊரடங்கு முற்றாக நீக்கம் – வழமைக்குத் திரும்பியது கண்டி

kandy-apc (3)கண்டி மாவட்டத்தில் இன்று ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

”கண்டி மாவட்டத்தில் அமைதியான சூழல் நிலவுவதால், இன்றிரவு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, கண்டி மாவட்டத்தில், ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

நேற்றிரவு 8 மணிக்கு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம்,  இன்று காலை 5 மணியுடன் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *