மேலும்

வெளியாரின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டேன் – மைத்திரி சூளுரை

maithriவெளியாரின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். குருநாகலில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அவர் அறிவித்தார்.

தனது தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் இந்த மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *