லண்டனில் ஈழத்தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய ஐந்து இளைஞர்களின் இறுதிநிகழ்வு – ஒளிப்படங்கள்
லண்டனில் கடந்தமாதம், எதிர்பாராமல் கடலில் மூழ்கி மரணமான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிச்சடங்கு நேற்றுக்காலை மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய, இந்த விபத்தில், கேனுகன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துசன் சிறீஸ்கந்தராசா, குருசாந்த் சிறீதவராசா ஆகிய ஐந்து இளைஞர்களே மரணமாயினர்.
கடந்த மாதம் 24ஆம் நாள், தென்கிழக்கு லண்டனில் உள்ள கேப்பர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த இந்த ஐந்து நண்பர்களும், திடீரென பெருக்கெடுத்து வந்த கடலில் மூழ்கி மரணமாகியிருந்தனர்.
இவர்களின் இறுதிச்சடங்கு நேற்றுக்காலை, லண்டனில் இடம்பெற்றது.
இந்த இறுதிச்சடங்கில் மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அண்மைக்காலத்தில், பெரும் எண்ணிக்கையான ஈழத்தமிழர்கள் ஒன்று திரண்ட இறுதி அஞ்சலி நிகழ்வாக இது அமைந்திருந்தது.
Please accept our deepest sympathies and heartfelt condolences. -Kannan & Family, Markham. Canada